Saturday, February 27, 2010

பதின்ம வயதில் பட்டவை (தொடர் பதிவு )


அண்ணன் கோவி கண்ணன் பதின்ம வயதின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு, என்னையும் தொடரச்சொல்லி அழைத்துள்ளார். அவருக்கு மகிழ்ச்சிகளும் நன்றிகளும்.

கொசுவர்த்தி சுருளை 18 வருடம் பின்னோக்கி சுற்றினால்...

சிங்கார வேலனில் நம்ம கமல் சென்னைக்கு கிளம்பும்போது பக்கத்து வீட்டு அம்மா, கருவாடு கூடையை தன் மகன்கிட்ட சேர்க்க சொல்லி கொடுப்பாங்க.

கூடவே ஒரு டயலாக்கும் " இந்த ஊருல யார் பேச்சையும் தட்டாத நல்ல புள்ள நீதான்"னு

அந்த மாதிரிதான் என் நிலமையும். சுற்றியுள்ள மக்கள் சொன்னால் தட்ட முடியாத அளவுக்கு அன்பை வைத்திருந்தார்கள்.

பதிமூன்றாம் வயதின் தொடக்கம் ஏழாம் வகுப்பின் ஆரம்பம். ஆசிரியர்களும் என் மீது பிரியமாகவே இருந்தார்கள். உடம்பு சரியில்லாமல் அடிக்கடி லீவு எடுப்பது போன்ற நல்ல பழக்கங்களும் உண்டு. ஆனால் என்னிடமிருந்த ஒரே கெட்ட பழக்கம் (?) கிரிக்கெட். அண்ணன்களுடன் கிரிக்கெட் விளையாடுவதில் அவ்வளவு விருப்பம்.

ஒரு முறை கிரிக்கெட் விளையாட லீவு எடுத்தது தெரிந்து போய் இமேஜ் டேமேஜ் ஆகியது.

வாத்தியார் கேட்ட ஒரே கேள்வி " அந்த வெள்ளைக்காரனுங்கதான் வெயிலுக்காக விளையாடினாங்க. நீ இருக்குற நிலமைக்கு இந்த வேகாத வெயில்ல விளையாடனுமா? போ ராசா, போய் படி" இதுக்கு அவர் நாலு அடி அடித்திருக்கலாம்.

அன்றிலிருந்து உடம்பு சரியில்லைனா கூட வீட்டிலிருந்து ஆள் வந்தா தான் விடுவாங்க.

இருபாலர் பள்ளியாகையால் வீட்டிலிருந்து நல்ல குளித்து விட்டு , தலை சீவி நீட்டா ட்ரெஸ் பண்ணிதான் கிளம்புவோம்.

எங்கள் (புனித அந்தோனியார் நடுநிலை) பள்ளியில் ஒவ்வொரு மாதமும் தேர்வு வைத்து ராங்க் கொடுப்பது வழக்கம். லட்சுமி சங்கர். 6ம் வகுப்பிலிருந்து எனக்கு போட்டியாக இருந்த ஒரே ஆள். நல்ல நண்பன்(இனிய எதிரி).அவன்தான் லீடர். எப்போதும் முதல் ராங்க் எடுப்பவன்.எனக்கு ரெண்டாமிடம்.ஏழாம் வகுப்பில் ஒரு முறை அவனை முந்தி முதல் இடத்துக்கு வந்த ஒரு மாதமும் பேசமால் இருந்தான். அவ்வளவு வைராக்கியம்.

எட்டாம் வகுப்பு தொடக்கத்தில் சங்கர் வேறு ஸ்கூல் மாறி சென்றதால், பள்ளி மாணவர் தலைவன் (SPL ) பொறுப்பை தலைமையாசிரியர் ஏற்க சொன்னார். அதிலுள்ள தலைவலி (ஒன்னுமில்லை ஃபிரியா இருக்க முடியாது) அறிந்து மறுத்துவிட்டேன்.

SPL ன் வேலை காலை அசெம்ப்ளியில் உறுதிமொழி எடுப்பது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது இப்படி பல...

பின்பு, நம்ம ஸ்டார்ஜன் மற்றும் பலரை அந்த பொறுப்பு சுற்றி, குரல் சரியாக செட்டாகாததால் பின்பு என்னிடமே ஒப்படைக்கப்பட்டது ( நான் நல்லா கத்துவேன்).

ஸ்கூலில் சவ் மிட்டாய் விற்கும் அக்காவைச்சுற்றி எப்பவும் கூட்டம் இருக்கும். நம்ம ஸ்டார்ஜன் தான் அதிகமா வாங்கி தின்பாரு. அதனால மேலதிக விவரங்களுக்கு காண்டக்ட் ஸ்டார்ஜன் ப்ளீஸ்.

எங்கள் அம்மாவின் அம்மா ஊருக்கு சென்றால் ற்றில் குளிக்க செல்வது வழக்கம்( வீட்டிலும் குளிப்பேங்க). சகோதரி மற்றும் உறவினர் பெண்களுடன் தான் நானும் தம்பிகளும் செல்வோம். அவங்களுக்கெல்லாம் நாங்கதான் பாதுகாப்புன்னு ஒரு நெனப்பு(எங்களுக்குத்தான்). ஆற்றுக்கு செல்லும் வரை சந்தோசமாக பேசிக்கொண்டே செல்வது, குளித்து வரும் வழியில் வெள்ளரி, பதநீர், வடை என்று எதாவது சாப்பிட்டுக்கொண்டே போவதை நினைத்தால் நாக்கில் நீர் சுரக்கிறது.

யாராவது ஃபாலோ பண்ணுற மாதிரியோ, பார்த்துகிட்டே இருக்குற மாதிரியோ தெரிஞ்சா. நாங்க களத்துல இறங்கி ஒரே முறைப்புதான். அப்புறம் எப்படி பின்னாடி வருவாங்க?

அது மழை நேரம். வாய்க்கால் (கால்வாய்) நிறைய நீர். நானும் தம்பியும் குளித்து கொண்டிருக்கும் போது அடித்துச்செல்லப்பட்டோம். அடுத்த படித்துறையில் குளித்து கொண்டிருந்த அக்காமார்கள் பிடித்து இழுத்து காப்பாற்றி விட்டார்கள்.

வீட்டில் ஒரே பாராட்டு, நீ தம்பியை பிடிக்கலைன்னா அவன் தனியா போயிருப்பான்னு. நான் சொன்னேன், என் கையைப்பிடிச்சது அவன். தண்ணி அவனை இழுத்ததால் என்னை அவன் இழுத்து விட்டான் என்று.

கோபப்பட்டு ஏதாவது கத்தினால் அம்மம்மா சொல்லுவா. "பொறுமைக்கடல்ப்பா நீ(அவ்வ்வ்), இப்படி கோபப்பட மாட்டியே. ஒருத்தரை மாடு மாதிரி இருக்கியேன்னா கோபப்படுவான். அதையே பசு மாதிரி இருக்கியேன்னா சந்தோசப்படுவான். சொல் ஒன்னுதாம்ப அது தர்ற அர்த்தத்தை பார்த்தியா.யார்ட்ட பேசினாலும் பண்பா பேசணும். பொறுமைக்கு அழிவேயில்லைப்பா" என்று.

ஒன்பது , பத்தாம் வகுப்பை நெல்லை சாப்டர் மேல்நிலை பள்ளியில் படித்தேன். பஸ்காரர்கள் மாணவர்களுக்கு நல்ல மரியாதை கொடுத்ததால் நாங்கள் ஒரு கிலோ மீட்டர் நடந்து வந்து கோயில் வாசலில் ஸ் ஏறுவோம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் (1995) 423 மார்க் எடுத்திருந்தேன். கணக்கில் 100. சாக்லெட் வாங்கி கொண்டு, பழைய பள்ளிக்கு சென்றேன். மிக்க மகிழ்ந்தார்கள். அன்றைய அசெம்ப்ளியில் அறிவிப்பும் செய்தது பெருமையாக இருந்தது.

வகுப்பு வாரியாக ஆசிரியர்களுக்கு சாக்லெட் கொடுத்துக்கொண்டே வந்தேன். 6ம் வகுப்பு டீச்சர் நான் படிக்கும் காலத்திலேயே ரொம்ப கண்டிப்பானவர். அவரிடம் கொடுத்ததும் அவர் சொன்னார். " தம்பி மார்க் எடுத்தது சந்தோசம், எனக்கு சாக்லெட் வேணாம்பா. அப்புறம் இன்னொன்னு, யாருக்கு கொடுத்தாலும் சாக்லெட்டை நீ எடுத்து கொடுக்காதே , அவங்களிடம் நீட்டு தேவையானதை எடுத்துப்பாங்க. யாரும் அள்ளிற மாட்டாங்க. அதுதான் மரியாதை" என்று. அப்போது நினைத்தேன் கற்று கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்று.

இந்த கால கட்டங்களில் பெண்களுடன் சேர்ந்து ஆற்றுக்கு செல்வதை நிறுத்திக்கொண்டேன் (அல்லது நிறுத்திவிட்டார்கள்). பெண்களுடனான பழக்கம் குறைந்து ஆண்களின் பழக்கம் அதிகமாகியது.

ம்ம்ம்ம்ம்ம்..... அந்த காலம் மாதிரி வராது :)




பின்பு நெல்லை IRT பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன்.

வாழ்க்கையில் சில சிறப்பு தருணங்கள் அமையும் என்பார்களே அது ரெண்டாமாண்டில் ராதை மேடத்தின் மூலமாக் அமைந்தது. அப்போதுதான் B.E.,முடித்து விட்டு ட்ரைனிங் லெக்ட்சரராக சேர்ந்திருந்தார். நாலைந்து வயது வித்தியாசம் இருக்கும். அக்காக்களின் சரசரியான தோற்றம்.

வந்த முதல் நாளே பேச்சின் மூலம் எங்களை கவர்ந்து விட்டார். பெயர் விபரம் கேட்டவர். பின்பு கேட்ட கேள்வி "உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்" ஆளாளுக்கு பலரைச்சொல்ல. கடைசியில் "உங்களுக்கு பிடிச்ச ஹீரோ நீங்கதான். உலகத்தில் உங்களை நீங்கள் விரும்புகிற அளவுக்கு வேறு யாரையும் விரும்புவதில்லை. உங்களை நீங்கள் அறிந்து கொண்டால் எல்லோரும் விரும்புவராக மாறலாம்" என்று அவர் சொன்னார்.

எத்தனை பெரிய உண்மை. அன்றிலிருந்து எங்களில் ஒருவராக, எங்கள் வழிகாட்டியாக நாங்கள் பார்க்கத்தொடங்கினோம். அறிவுரை ஏதும் சொல்லவில்லை ஆனால் வாழ்ந்தார்கள். (எளிதாக சொல்லவேண்டும் என்றால் 3 idiots அமீர்கான் மாதிரி)

இருபாலர் கல்லூரியில் ஒன்றாக படித்தாலும். ஆண்களும் பெண்களும் அவரர்க்கான உலகங்களில் தான் வாழ்ந்து கொண்டிருந்தோம். "விலகி இருந்தால் தான் பிரச்சனை வரும். இருவரும் சேர்ந்து பழகி நண்பார்களாகி விடுங்கள். எந்த தப்பான எண்ணமும் வராது" என்று தெளிவு படுத்தியவர். அதன் பிறகு இருபாலரும் அருகில் அமர்ந்தாலும் நட்பைத்தவிர வேறெந்த எண்ணமும் வந்ததில்லை.

இன்றும் எந்த ஒரு செயலிலும் அவர்களின் பாதிப்பு தெரிகிறது. அது தான் அவர் நோக்கத்தின் வெற்றி.


பெருங்கடலில் ஒரு துளி போல நான் இங்கு சிலவற்றை மட்டுமே சொல்லமுடிந்தது.

சொன்னதெல்லாம் உண்மை. சொல்லாததும் உண்மை.

பதிவின் நீளம் , உங்கள் நேரம் இரண்டையும் கருதி இத்துடன் முற்றும்.


இந்த பதின்ம நினைவுகளை தொடர நான் அன்புடன் அழைப்பது.

கண்ணா

ஜெகநாதன்

நாடோடி

ஷங்கி

செ.சரவணகுமார்

,

44 comments:

Prathap Kumar S. said...

//இருபாலர் பள்ளியாகையால் வீட்டிலிருந்து நல்ல குளித்து விட்டு , தலை சீவி நீட்டா ட்ரெஸ் பண்ணிதான் கிளம்புவோம்//

அப்ப ஆண்கள் பள்ளில படிச்ச நாங்கல்லாம் குளிக்காம, கிழிஞ்சுப்போன ட்ரஸ்சைப்போட்டுட்டு நாத்தம்புடிச்சுத்தான் ஸ்கூலுக்கும்போனோம்னு சொல்றீங்க? :))

Prathap Kumar S. said...

அப்ப நம்ம குரு உங்க கிளாஸ்மெட்டா... சரியாப்போச்சு...

நம்ம குரு சவ் மிட்டாய் ப்ரியருங்கறதை அவரோட கவுஜை படிக்கும்போதே தெரியுது... இன்னும் சவ் மிட்டாயை மறக்காம இருக்கறாரே...குரு வாழ்க...

கோவி.கண்ணன் said...

ஆற்றுக் குளியல் சூப்பர்.

படிப்பிலும் சிறப்பாக செய்திருக்கிறீர்கள்.

ஒருதலை காதல் எதுவும் இல்லையா ?

அவ்வ் (ஷேக்குக்கு தெரியமால் என்னிடம் சொல்லுங்க)
:)

கோவி.கண்ணன் said...

//நாஞ்சில் பிரதாப் said...
அப்ப நம்ம குரு உங்க கிளாஸ்மெட்டா... சரியாப்போச்சு...
//

சரியாப் போச்சு. அவிங்க இருவரும் நெருங்கிய உறவுக்காரர்கள்

:)

நாடோடி said...

//சொன்னதெல்லாம் உண்மை. சொல்லாததும் உண்மை.//

இன்னும் அந்த லீடர் பதவியை விடல போல..

நாடோடி said...

//பெண்களுடனான பழக்கம் குறைந்து ஆண்களின் பழக்கம் அதிகமாகியது.//
என்ன தல இப்படி ஆகிபோச்சி..ரெம்ப வருத்தமா இருக்கு தல..

அண்ணாமலையான் said...

ரைட்டு

மாதேவி said...

"உங்களுக்கு பிடிச்ச ஹீரோ நீங்கதான்..." இது ரோம்பப் பிடித்தது.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அந்த கதையே ஏன் கேக்குறீங்க?..

அந்த அக்கா கொண்டு வர்ற சவ்மிட்டாய் ரொம்ப டேஸ்டா இருக்கும். அந்த அக்கா வீடு எங்கதெருவுல உண்டு.

அதேமாதிரி வீட்டிலேயும் செய்யணுன்னு ஆசை. அப்போ எங்க மாமி ஊர்ல இருந்து வந்திருந்தாங்க. அவங்க தான் சவ்மிட்டாய் செய்தாங்க. அவங்க செய்துகொண்டிருக்கும் போது என் தங்கை கையை இடையில விட்டுட்டாள். கையெல்லாம் பொத்து பொக்களமாகி விட்டது.

நட்புடன் ஜமால் said...

ஜாலியாக இருந்திச்சி படிக்க

படிப்புல நான் கடைசி அப்புடியும் நாந்தேன் எஜ்பிஎல் தொண்டை தான் கா-ரணம்.

கண்ணா.. said...

அழகா சொல்லிருக்கீங்க...

ஸ்டார்ஜன்னும் நெல்லைதானா..? எனக்கு இப்போதான் தெரியும் பாஸ்..

ஆனா நீங்க...நல்ல புள்ளையால்லா இருந்துருக்கீங்க...

ஆனா நான் ப்ளாஷ்பேக் சொன்னா.... எல்லாரும் காறி துப்பிருவாங்களே....

சரி...எவ்வளவோ பண்ணிட்டோம்..இதை பண்ண மாட்டமா..

நீங்க சொல்லிருக்கறதுல சிலர் பதிவை படித்திருக்கிறேன். மற்றவர்களையும் இனி தொடர்ந்திருவோம்..


ஏற்கனவே இந்த தொடருக்கு கிஷோரும் கூப்பிட்டு இருந்தார்.. உங்க ரெண்டு பேருக்காவும் விரைவில் போட்டுருவோம்

:)

சிநேகிதன் அக்பர் said...

//அப்ப ஆண்கள் பள்ளில படிச்ச நாங்கல்லாம் குளிக்காம, கிழிஞ்சுப்போன ட்ரஸ்சைப்போட்டுட்டு நாத்தம்புடிச்சுத்தான் ஸ்கூலுக்கும்போனோம்னு சொல்றீங்க? :))//

தல ஏன் உண்மையெல்லாம் சொல்றீங்க. cool

//அப்ப நம்ம குரு உங்க கிளாஸ்மெட்டா... சரியாப்போச்சு...//

ஸ்கூல் மேட். கிளாஸ்மெட் இல்லை.

//நம்ம குரு சவ் மிட்டாய் ப்ரியருங்கறதை அவரோட கவுஜை படிக்கும்போதே தெரியுது... இன்னும் சவ் மிட்டாயை மறக்காம இருக்கறாரே...குரு வாழ்க...//

இதுல எதும் உள்குத்து இல்லையே.


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரதாப்.

கண்ணா.. said...

//ஒன்பது , பத்தாம் வகுப்பை நெல்லை சாப்டர் மேல்நிலை பள்ளியில் படித்தேன். பஸ்காரர்கள் மாணவர்களுக்கு நல்ல மரியாதை கொடுத்ததால் நாங்கள் ஒரு கிலோ மீட்டர் நடந்து வந்து கோயில் வாசலில் பஸ் ஏறுவோம்//

நான் த கிரேட் எம்டிடி... இங்க வந்து எல்லாம் மாங்கா, நெல்லிக்கா, குச்சி ஐஸ் தான் பேமஸ்...

அதுவும் நாங்க லஞ்ச் டையத்துல பஜாரை சுத்தி வருவதற்கே நேரம் சரியா இருக்கும்.

ம்...அதெல்லாம் அந்த காலம்

:(

Unknown said...

பதின்ம பருவத்து நினைவுகளை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் அக்பர்.
வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

:-))

அருமையான பகிர்தல் அக்பர்.

சிறுகதை எழுதணும் மக்கா,நீங்க.

Tech Shankar said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

சிநேகிதன் அக்பர் said...

வாங்க கோவி அண்ணா

//ஆற்றுக் குளியல் சூப்பர்.

படிப்பிலும் சிறப்பாக செய்திருக்கிறீர்கள்.//

நன்றி அண்ணா.

//ஒருதலை காதல் எதுவும் இல்லையா ?

அவ்வ் (ஷேக்குக்கு தெரியமால் என்னிடம் சொல்லுங்க)
:)//

காதல் இல்லாமல் இருக்குமா. அதுக்குத்தான் சொல்லாததும் உண்மைன்னு போட்டேன். சொல்கிறேன் (ரகசியமாக்)

//சரியாப் போச்சு. அவிங்க இருவரும் நெருங்கிய உறவுக்காரர்கள்

:)//

:)

தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தும் உங்களுக்கு நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ஸ்டீபன்,

//இன்னும் அந்த லீடர் பதவியை விடல போல..//

அதனால் நண்பர்களை இழந்ததுதான் அதிகம். எனவே அதை எப்போதோ மறந்து விட்டேன்.

அது கடமைக்கும் நட்புக்கும் இடையிலான போராட்டம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

////பெண்களுடனான பழக்கம் குறைந்து ஆண்களின் பழக்கம் அதிகமாகியது.//
என்ன தல இப்படி ஆகிபோச்சி..ரெம்ப வருத்தமா இருக்கு தல..//

நானே வருத்தப்படலை. விடுங்க தல :)

சிநேகிதன் அக்பர் said...

வாங்க அண்ணாமலை சார்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க மாதேவி

//"உங்களுக்கு பிடிச்ச ஹீரோ நீங்கதான்..." இது ரோம்பப் பிடித்தது.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ஸ்டார்ஜன்
//அந்த அக்கா கொண்டு வர்ற சவ்மிட்டாய் ரொம்ப டேஸ்டா இருக்கும். அந்த அக்கா வீடு எங்கதெருவுல உண்டு.//

ஏய் இதை சொல்லவேயில்லை பார்த்தியா.

//என் தங்கை கையை இடையில விட்டுட்டாள். கையெல்லாம் பொத்து பொக்களமாகி விட்டது.//

அய்யோ பாவம். பார்த்து செய்ய வேண்டியதுதானே.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ஜமால்

//ஜாலியாக இருந்திச்சி படிக்க

படிப்புல நான் கடைசி அப்புடியும் நாந்தேன் எஜ்பிஎல் தொண்டை தான் கா-ரணம்.//

அப்படியா. அப்போ கலக்கியிருப்பீங்க.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க கண்ணா

//ஸ்டார்ஜன்னும் நெல்லைதானா..? எனக்கு இப்போதான் தெரியும் பாஸ்..//

அய்யோ அய்யோ அவரு பக்கத்து தெரு. நம்ம மாப்பிள்ளை.

//ஆனா நான் ப்ளாஷ்பேக் சொன்னா.... எல்லாரும் காறி துப்பிருவாங்களே....//

அப்படியெல்லாம் விட்டுருவோமா. நீங்க சொல்லுங்க தல்.

//சரி...எவ்வளவோ பண்ணிட்டோம்..இதை பண்ண மாட்டமா..//

அது.

//
நான் த கிரேட் எம்டிடி... இங்க வந்து எல்லாம் மாங்கா, நெல்லிக்கா, குச்சி ஐஸ் தான் பேமஸ்...

அதுவும் நாங்க லஞ்ச் டையத்துல பஜாரை சுத்தி வருவதற்கே நேரம் சரியா இருக்கும்.

ம்...அதெல்லாம் அந்த காலம்//

கேட்குறதுக்கே எவ்வளவு சந்தோசமா இருக்கு.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க அபுல்பசர்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க பா.ரா அண்ணா

//:-))

அருமையான பகிர்தல் அக்பர்.

சிறுகதை எழுதணும் மக்கா,நீங்க.//

நீங்கள் கொடுக்கும் ஊக்கத்திற்கு நன்றி அண்ணா.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க சங்கர்

//East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..//

பார்த்தேன் ரசித்தேன்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஹுஸைனம்மா said...

திருநெல்வேலிக்காரவங்க (ஊர்குறித்து) எழுதினதை வாசிக்கும்போது, பழைய காலங்களை ரொம்ப மிஸ் பண்றேன்!!

சாமக்கோடங்கி said...

கொசுவர்த்திச்சுருள் நன்றாக எரிந்து புகைந்தது.. தொடருங்கள்..

வாழ்த்துகள்..

நன்றி..

Anonymous said...

ரசித்தேன்

அத்திரி said...

ரொம்ப நல்ல பிள்ளையா இருந்திருக்கீங்க போல..................

சாமக்கோடங்கி said...

எங்கோ போனாலும் ஒரே பதின்ம நினைவுகளா இருக்கு...

என்னோட நினைவுகளை போய் நினைத்துப் பார்க்கிறேன்..

நன்றி..

சிநேகிதன் அக்பர் said...

வாங்க‌ ஹுஸைனம்மா

// திருநெல்வேலிக்காரவங்க (ஊர்குறித்து) எழுதினதை வாசிக்கும்போது, பழைய காலங்களை ரொம்ப மிஸ் பண்றேன்!!//

ஊர் சென்று வாருங்கள் மேடம். பழைய நினைவுகளை சும‌ந்து கொனண்டு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க பிரகாஷ்

//என்னோட நினைவுகளை போய் நினைத்துப் பார்க்கிறேன்..//

சீக்கிரம் போடுங்க பாஸ் படிக்கணும்.

//கொசுவர்த்திச்சுருள் நன்றாக எரிந்து புகைந்தது.. தொடருங்கள்..

வாழ்த்துகள்..//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ஆனந்த்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க அத்திரி

//ரொம்ப நல்ல பிள்ளையா இருந்திருக்கீங்க போல..................//

நம்மள இன்னுமா இந்த ஊர் நம்புது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

thiyaa said...

அருமை

சிநேகிதன் அக்பர் said...

வாங்க தியா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஷங்கி said...

ஹ்ம், நினைவுகள்!!! அசைபோடுவது சுகமானது. சிலிர்ப்பானது. நன்றாகச் செய்திருக்கிறீர்கள். நானும் தொடரணுமா? என்னிடம் சுவாரசியமான அனுபவங்கள்(?!) எதுவும் இல்லையே அந்த வயதில். பார்க்கலாம், யோசித்துப் பார்க்கிறேன்.

Thenammai Lakshmanan said...

நேர்மையான பகிர்வு அக்பர்

Nathanjagk said...

அருமையான பதின்ம நினைவுகள்.
பள்ளி வாழ்க்கையை அழகாக எழுதியிருக்கீங்க மாப்பு..!
423 எடுத்த புள்ளையாப்பா இது..??
வாழ்த்துகள்!!!
..
தொடர்பதிவுக்கு அழைக்கிறதுக்காகவே இங்க ரெண்டு பேரை வச்சிருக்காங்கப்பா..
ஒண்ணு சங்காண்ணன், அப்புறம் நானு...!!
ம்.. ஜமாய்ச்சிடுவோம்!

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ஷங்கி

//ஹ்ம், நினைவுகள்!!! அசைபோடுவது சுகமானது. சிலிர்ப்பானது. நன்றாகச் செய்திருக்கிறீர்கள். நானும் தொடரணுமா? என்னிடம் சுவாரசியமான அனுபவங்கள்(?!) எதுவும் இல்லையே அந்த வயதில். பார்க்கலாம், யோசித்துப் பார்க்கிறேன்.//

நானே இவ்வளவு எழுதும் போது... உங்களை கேட்கவா செய்யனும் சும்மா ஜமாய்ங்க தலைவரே.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க தேனம்மை அக்கா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க மாம்ஸ்

//அருமையான பதின்ம நினைவுகள்.
பள்ளி வாழ்க்கையை அழகாக எழுதியிருக்கீங்க மாப்பு..!
423 எடுத்த புள்ளையாப்பா இது..??
வாழ்த்துகள்!!!//

நன்றி நன்றி

//தொடர்பதிவுக்கு அழைக்கிறதுக்காகவே இங்க ரெண்டு பேரை வச்சிருக்காங்கப்பா..
ஒண்ணு சங்காண்ணன், அப்புறம் நானு...!!
ம்.. ஜமாய்ச்சிடுவோம்!//

உங்களை விட‌ வேறு யாரை அழைக்க‌..
ஜமாய்ங்க மாம்ஸ்.

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails