Sunday, June 21, 2009

நானும் திருநெல்வேலி தான்

இந்தியாவின் தெற்கே இருந்து இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் தமிழ்நாட்டை போல் , தமிழ்நாட்டின் தெற்கே இருந்து கல்வியில் பெருமை சேர்க்கும் திருநெல்வேலி தான் நான் பிறந்த ஊர் .




நம்ம ஊர் (எங்க ஊர்னு சொல்லற பழக்கம் நம்ம ஊர்ல இல்லிங்க ) அல்வா ஒன்னு போதுங்க நம்ம ஊரை பற்றி சொல்ல, அது போக நிறைய பிரசித்தி பெற்ற விசயங்கள் இருக்குங்க




தாமிரபரணி ஆறு இருக்குங்களே அதுல குளிச்சா குளிச்சுகிட்டே இருக்கலாங்க அதுல இருக்குற சுகமே தனி தான் . இது உற்பத்தி ஆகும் பாபநாசம் மலைத்தொடர் ரொம்ப ரம்யமான பகுதி . இங்கு காரையாறு , சேர்வலாறு என்று ரெண்டு அணைக்கட்டு இருக்குங்க , காரையாறு அணையின் மறுபகுதியில் பான தீர்த்தம் அருவி பிரம்மாண்டமா விழும் அழகை பார்த்துட்டே இருக்கலாம் (ரோஜா படத்துல நம்ம மதுபாலா குளிப்பாங்களே அந்த அருவிதான் ). அணைக்கு கீழே அகஸ்தியர் அருவியும் உண்டு . இந்த அருவிகளின் சிறப்பம்சம் வருடம் முழுக்க தண்ணீர் வற்றாது.




எல்லோருக்கும் குற்றாலம் தெரியும் அதுபோல மணிமுத்தாறு அருவியும் குளிப்பதற்கு சுகமா இருக்கும் . ஊட்டி , கொடைக்கானல் பற்றி நினைக்கிறவங்க மணிமுத்தாறு மேலே உள்ள மலைப்பகுதியான மாஞ்சோலை, காகாச்சி , கோதையாறு போன்ற பகுதிக்கும் போயி பாருங்க சும்மா சிலுசிலுன்னு இருக்கும் .




இந்தமாதிரி இடங்களுக்கு போகும் போது சாப்பாடும் கூடவே கொண்டு போயிருங்க அங்கு ஹோட்டல்கள் கம்மி விலையும் கம்மி.




இதுபோக தெற்கே கன்னியாகுமரி ஒரு சிறந்த சுற்றுலா தளம் . இது எங்க ஊர்ல இருந்து 0 கி.மீ தூரத்துல இருக்கு .




கல்வியில் பெருமை சேர்க்கும்னு சொல்லிட்டு அத பற்றி எழுதலன்னா எப்படி


நம்ம ஊர்ல பள்ளி , கல்லூரிகளுக்கு குறைவு இல்லைங்க‌. ஆண்டு தோறும் மிகச் சிறந்த பட்டதாரிகள் வெளி வருகிறார்கள்.தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று சொல்லப்படும் பாளையங்கோட்டை நம்ம மாவட்டத்துலதான் இருக்கு.




ஆனா




வாழ்றதுக்கு வசதியான ஊரை விட்டு வேற எங்கும் போவாங்களா ? ஆனா நாங்க போவோம் (போய் ஆவணும் ) ஏன்னா எங்க ஊர்ல வேலை வாய்ப்பு ரொம்ப குறைவு . மாவட்டத்துல பாதிபேர் வெளியூரிலோ , வெளிநாடுகளிலோ தான் வேலை செய்றாங்க .




நானும் அதில் ஒருவன் .








8 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாங்க வாங்க‌

சிநேகிதன் அக்பர் said...

வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்

நசரேயன் said...

ஒ.. அப்படியா.. நான் புளியங்குடி

கல்கி said...

எங்க ஊர்னு சொல்லற பழக்கம் நம்ம ஊர்ல இல்லிங்கன்னு சொல்லிட்டு, ரெண்டு எடத்துல எங்க ஊருன்னு சொல்லியிருக்குறத வன்மையாக கண்டிக்கிறோம்... :-)

சிநேகிதன் அக்பர் said...

வாங்க நசரேயன்
அப்ப நாம ரொம்ப நெருங்கிட்டோம்

வருகைக்கு நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க கல்கி

தப்புதான்.தப்புதான்..தப்புதான்...

கண்டிக்கிறோம் என்று சொல்வதைப்பார்த்தால் நீங்க தனி ஆள் இல்லைன்னு தெரியுது. ஒரு குருப்பாத்தான் அலையுறிங்களா, என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்.

SUFFIX said...

உண்மைத்தான் அக்பர்! ஆறோடு ஊரு சேர்த்து பேரு எடுத்தவுகத்தான் நீங்க.

M.G.ரவிக்குமார்™..., said...

நமக்கும் திருநெல்வேலி தாங்க பாளையங்கோட்டை.......

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails