Saturday, July 24, 2010

அன்புச்செல்வன் : பா. ரா. அண்ணன்

(காக்க காக்க சூர்யா ஸ்டைலில் படிக்கவும்)

கைகால் வலியோட, உடம்பு முழுக்க அசதியோடா தூக்க கலக்கத்துல உட்கார்ந்து இதை எழுதக் காரணம் நேத்து நடந்த சந்திப்புதான்.

என் பேர் அக்பர், அக்பர் PPS ( பிரபல பதிவர் சிரிப்பு பிரிவு ) ன் பேருக்கு பின்னாடி இருக்கிற மூனெழுத்து நான் படிச்சி வாங்கின பட்டமோ, என்னோட லட்சியமோ இல்லை. நம்மூருல ரொம்ப மலிவா கிடைக்கிறது அடை மொழி ஒன்னுதான். அதனால அதை நாங்களே சேர்த்துகிட்டோம். :)

வியாழன் இரவு செல்லில் சரவணன் அழைத்தார்.

சரவணகுமார் PPS : அக்பர் நாளை காலையில நான், ஆறுமுகம் PPS, முடிவிலிசங்கர் PPS, மற்றும் எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பா.ரா அண்ணா நாலு பேரும் வாறோம் ஸ்டார்ஜன் PPS மற்றும் டீமோட ரெடியா இருங்க ஒரு வேட்டைக்கு போக வேண்டியிருக்கு.

அக்பர் : அட பா.ரா அண்ணனா! அவரு வர்றதே பெரிய விசயம் ஆச்சே. இந்த தடவை எப்படியாவது கூட்டி வந்துடுங்க நாங்க ரெடியா இருக்கோம்.

மறுநாள் மதியம் பன்னிரெண்டு மணிக்கு சொன்ன படியே நால்வரும் ஆஜராகிறார்கள்.

ஆறுமுகம் : இதுதான் பா.ரா.! எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். இதுவரைக்கும் 150 எண்கவுண்டர் பண்ணியிருக்கார். எல்லாமே சக்சஸ். ஆனா ஒருத்தருக்கும் பாதிப்பில்லை.

ஸ்டார்ஜன் : அதெப்படி ?

சரவணன் : அவர் குறியே வேற.

சங்கர் : அதனாலதான் எல்லோரும் தப்பிச்சிட்டாங்களா?

ஆறுமுகம் : சீரியஸா பேசிட்டு இருக்கும்போது அங்கே என்ன ஜோக். இவருதான் நம்ம ஐந்து பேருக்கும் டிரைனிங் கொடுக்கப் போற ஆபிஸர். ஸார் இவரு அக்பர் அவரு ஸ்டார்ஜன் இன்னைக்கு வேட்டைக்குப் போற இடம் இவங்களுக்குத்தான் தெரியும். இவங்களோட போய் நாம சூட் பண்ணபோறோம்.

பா.ரா : அப்படியா! எல்லோருக்கும் வணக்கம். மொத்தம் 150 எண்கவுண்டர். ஒன்னு கூட மிஸ்ஸாகலை. ஏன்னா எல்லாமே அன்பால சுட்டது. அந்த சமயத்துல எல்லோர் கண்ணும் நம்ம மேலதான் இருக்கும். ரொம்ப கவனமா ஹாண்டில் பண்ணனும். சரி நீங்க நம்மாளுதான்னு தெரிஞ்சிக்க எல்லோரும் டி கார்டை காட்டுங்க.

எல்லோரும் காட்டுகிறார்கள். ஆறுமுகத்தோட கார்டை பார்த்தவுடன் ஷாக்காகும் பா.ரா.

பா.ரா : என்னாதிது. சிகரெட் குடிக்கிறபோஸ். அதுக்கு கீழே "சிகரெட் குடித்தல் உடல் நலத்துக்கு தீங்கானது" ன்னு சப்டைட்டில் வேற.

ஆறுமுகம் : யெஸ் சார். சிகரெட் குடிக்கிறமாதிரி படம் எடுத்தா அதுக்கு கீழே சப்டைட்டில் போடணும்கிறது அரசாங்கத்தோட உத்தரவு சார்.

பா.ரா : உங்க கடமை உணர்ச்சியை பாராட்டுறேன். ங்க வாழ்க்கையில எத்தனை தடைகற்கள் வந்தாலும் அதை தூசி மாதிரி நினைச்சி தட்டிவிட்டுட்டு போயிட்டே இருக்கணும் புரிஞ்சுதா. ஆமா உங்களையெல்லாம் யாராச்சும் ஃபாலோ பண்ணுறாங்களா.

ஸ்டார்ஜன் : என்னை 125 பேர் ஃபாலோ பண்ணுறாங்க. சில்வர் ஜூபிளி சார்.

அக்பர் : 125 ஃபாலோயர் 500 ஆக வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

சரவணன் : அருமை ஸ்டார்ஜன். தொடருங்கள்.

சங்கர் : இது முடிவில்லாமல் தொடர வாழ்த்துகள்.

ஆறுமுகம் : ம்ம்ம். ரைட்டு. நடத்துங்க. :)

பா.ரா : இங்கே என்ன நடக்குது?

சங்கர் : அவருக்கு 125 ஃபாலோயர் சேர்ந்ததை ஊக்கப்படுத்துறோம் சார்.

பா.ரா : அடப்பாவிங்களா. நாம செய்யுற வேலைக்கு யாரும் நம்மை ஃபலோ பண்ணாம பார்த்துக்கணும். அது சரி எண்கவுண்டர்னா என்னான்னு தெரியுமா.

அக்பர் : எங்களுக்கு ஹிட் கவுண்டர்தாண்ணே தெரியும். எண்கவுண்டர்ன்னு புதுசா ஏதாச்சும் வந்திருக்கா என்னா. அப்ப உடனே விட்ஜெட் சேர்த்தாகணுமே.

பா.ரா : சரி சரி அதப்பத்தி பின்னாடி சொல்றேன். அப்புறம் என்னை அண்ணேன்னு கூப்பிட்டது ரொம்ப பிடிக்குது. இனி உறவைச்சொல்லியே கூப்பிடுங்க. இப்ப க்ரூப் போட்டோவுக்கு போஸ் கொடுங்க.

சங்கர் : ஆனா அதை பதிவுல போடாதிங்க. அண்ணன் முகம் வெளியாட்களுக்கு தெரியக்கூடாதுன்னு அரசாங்க ஆர்டர்.

எல்லோரும் போஸ் கொடுத்து படம் எடுத்தோம். அதை எடுத்தது அக்பரோட மச்சினன் அர்க்கம். அதுக்கு பக்கத்துல நின்னது அக்பர் தம்பி ஜெயினுலாபிதீன் என்று அப்போ உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏன்னா அவங்க ரெண்டு பேரும் கேமராவுக்கு பின்னாடி நின்னாங்க.

எல்லோரும் சாப்பிட்டு விட்டு வேட்டைக்கு ரெடியாகி ஆறுமுகத்தின் நிஸ்ஸான் காரில் ஏறினோம்.

( முடிந்தால் இந்த மூடுக்கு கில்லில வர்ற "அர்ஜுனரு வில்லு" பாட்டை நினைத்து கொள்ளவும் )

ஆறுமுகம் ஆக்ஸிலேட்டரில் வைத்த காலை எடுக்காமல் 100 கடந்து போகிறார். எந்த ஸ்பீடு பிரேக்கரிலும் பிரேக் பிடிக்கவில்லை.

பா.ரா : என்ன மாப்ள ஆறுமுகம் அப்படி ஒன்னும் அவசரமில்லையே ஏன் இவ்வளவு வேகம்.

ஆறுமுகம் : நீங்க சொன்னதை நீங்க மறக்கலாம். நான் மறக்கமாட்டேன் மாமா. எத்தனை தடைக்கற்கள் வந்தாலும் தூசி மாதிரி தட்டிவிட்டுட்டு போயிட்டே இருக்கணும்னு நீங்கதானே சொன்னீங்க. நான் கடமையில கண்ணா இருப்பேன் மாமா. ( உண்மையைச் சொன்னா பின்னாடி ஒன்னு நோட் பண்ணிக்கிட்டே இருந்து பதிவெழுதி ஹிட் வாங்கிடும் விடக்கூடாது)

பா.ரா : ஓட்டணும்னு முடிவு பண்ணிட்டே. நீ ஓட்டு மாப்ளே.

ஆறுமுகம் : மாமா!

பா.ரா : நான் காரைச்சொன்னேன். :)

அக்பர் : ஸ்டார்ஜன் இந்த சிக்னல்ல இருந்து ரைட்ல போயி லெஃப்ட் போகணுமா?

ஸ்டார்ஜன் : இல்லை லெஃப்ட்ல போயிட்டு அப்புறம்தான் ரைட்டு.

சங்கர் : எனக்கு இது ரைட்டா தெரியலையே.

அக்பர் : ஆமா சங்கர். அது லெஃப்டுதான்.

சரவணன் : (மனதுக்குள்) இவங்க காட்டுற வழியில போறதுக்குள்ளே ரெண்டு புத்தகம் படிச்சி விமர்சனம் எழுதியிருக்கலாம்.

அக்பர் : சாரிண்ணே ரொம்ப நாளைக்கு முன்னாடி வந்ததா. இப்ப சிக்னல் , ஒன்வேன்னு நிறைய விசயங்கள் மாறியிருக்கு. அதான் குழப்பமா இருக்கு.

ஆறுமுகம் : (அடப்பாவி) கோட்டையாவது அதே இடத்துல இருக்கா.

ஸ்டார்ஜன் : என்ன இப்படி கேட்டுட்டிங்க. அங்கேயேதான் இருக்கு. ஆனா அது எங்கே இருக்குன்னுதான் மறந்து போச்சு.

ரோட்டோரமா பல இடங்களில் நிறுத்தி வழி கேட்டு, பல இடங்களை சுற்றி கடைசியில் ஜபுல்காரா எனப்படும் அந்த ழமை வாய்ந்த குன்று குகையை அடைகிறார்கள்.

பா.ரா : சூட்டிங்கை வெளியே வச்சுக்கவா. இல்லை குகைக்குள்ளே வைக்கலாமா.

சங்கர் : முதல்ல வெளியே வச்சுக்குவோம். சில நேரம் குகைக்குள்ள லைட்டிங் கம்மியா இருக்கலாம். ஆறுமுகம் கேமராவை கொடுங்க.

பா.ரா : ரொம்ப அருமையா இருக்கு இடம். மத்த இடங்கள்ல கடும் வெயில் அடிக்கும் போது இந்த இடம் மட்டும் நல்ல கூலிங்கா இருக்கே. சரி இனிமே சுட்டுத்தள்ளுங்க.

அங்கே பிடித்தது இங்கே.


(அர்க்கம், ஜெயினுலாப்தீன்,சங்கர், செ.சரவணக்குமார்,ஸ்டார்ஜன், ஆறுமுகம், அக்பர்)

நண்பர்களே நேற்று பா.ரா அண்ணன், செ.சரவணகுமார், ஆறுமுகம் முருகேசன், முடிவிலி சங்கர் நால்வரும் எங்களை சந்திக்க வந்திருந்தனர். நேற்று மறக்க முடியாத ஒரு இனிய நாளாக அமைந்து விட்டது. எந்த கவலையும் இல்லாமல் சிலமணி நேரங்கள் மகிழ்ந்திருந்தோம். ஜபுல்காரா என்ற குன்று குகைக்கு சென்று சுற்றிப்பார்த்தோம்.

சில காட்சிகளை சிலிக்கான் சிப்பில் புகைப்படங்களாகவும், அந்த சந்திப்பை எங்களது மூளையின் அடுக்குகளிடையே நீங்காத நினைவுகளாகவும் சேமித்து வைத்துள்ளோம் உங்களோடு பகிர்ந்து கொள்ள. அது பற்றிய விரிவான இடுகையை மற்ற பதிவர்கள் இன்னும் அழகாக எழுதுவார்கள். இது சும்மா ஜாலிக்கு. மீண்டும் சந்திப்போம்.

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails